Monday, April 20, 2009

குழந்தைகளுக்கு அம்மை போட்டு விட்டால்

1. வெயில் காலங்களில் அதிக சூடு காரணமாக குழந்தைகளுக்கு அம்மை போட்டு விட்டால் ஒன்றும் பயப்பட தேவையில்லை.

2. குழந்தைகள் கொப்புளங்களில் சொரியாமல் பார்த்து கொள்ளவும்.
இல்லை என்றால் அந்த தழும்பு போகவே போகாது.

3. படுக்கைகள் நல்ல சுத்தமாக வைக்க்வௌம் தினம் மாற்றவும்.
வெள்ளை பெட்சீட்டாக இருந்தால் நல்லது.

4. வேப்பிலை, பூண்டுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து சிறிது சாப்பிட கொடுக்கவும். வயிற்றில் உள்ள புண் ஆற்றும்.

5. சிறிய குழந்தைகளாக இருந்தால் கையில் நான்கந்து எலுமிச்சை பழத்தை விளையாட கொடுக்கலாம்.

6. நிறைய வேப்பிலையை பூச்சிகள் இல்லாமல் தட்டி அதை கட்டாக கட்டி அதனால் அரிப்பு எடுக்கும் இடத்தில் இதமாக வருடி விடவும்.

7. அசைவ‌ம் கொடுக்க‌ வேண்டாம், பால் சாத‌ம், மோர் சாத‌ம், ப‌ருப்பு சாத‌ம், த‌யிர் சாத‌ம் போன்ற‌வை கொடுத்தால் போதும்.

8. ஓட்ஸ், ராகி போன்ற‌ பான‌ங்க‌ளும் கொடுக்க‌லாம்.
கேர‌ட் ஜூஸ், ஆப்பில் ஜூஸ் , இள‌நீரும் கொடுக்க‌லாம்.

9. ஏழு நாட்கள் (அ) ஒன்பது நாட்கள் (அ) 11 நாட்களில் எல்லாம் சரியாகிடும்.
கொஞ்ச நாட்களுக்கு தழும்பு இருக்கும்.

10. அதற்கு வேப்பிலையுடன் கொத்துமல்லி தழை,கருவேப்பிலை, மஞ்சள்,சிறிது கிராம்பு சேர்த்து நன்கு அரைத்து நல்ல அள்ளி அள்ளி புண்களில் தடவி குளிக்க வைக்கவும்.
நாளடைவில் தழும்பு மறைந்து விடும்.
இது பெரியவர்களுக்கும் பொருந்தும்

4 கருத்துகள்:

Mrs.Menagasathia said...

நல்ல உபயோகமான டிப்ஸ்!!

Jaleela said...

வாங்க மேனகா உங்கள் வருகைக்கும்,பதிலுக்கும் மிக்க நன்றி.

kavi.s said...

ஜலீலக்கா பக்கத்து வீட்டு அக்கா சொல்வது போலயிருக்கு உங்க டிப்ஸெல்லாம்,எங்கள மாதிரி அம்மா, பாட்டி பக்கத்தில் இல்லாமல் தூரமாயிருப்பவர்களுக்கு உங்களுடைய டிப்ஸ் ரொம்ப பயனுள்ளதா இருக்கும் நன்றி ஜலீலாக்கா.

Jaleela said...

டியர் கவி மிக்க நன்றீ உங்கள் பதிலுக்கு.
இதெல்லாம் என் அனுபவம்.
எல்லோரும் பயன் அடைவது அதை விட ரொம்ப சந்தோஷமா இருக்கு,
இன்னும் மறந்து போன நிறைய டிப்ஸ்கலும் இருக்கும் நினைவுக்கு வர வர போடுகிறேன்.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா