Saturday, May 9, 2009

வேலையை சுலபமாக்க

1. சமையலுக்கு தேவையான முக்கியமான பொருள் இஞ்சி பூண்டு பேஸ்ட், இஞ்சி பூண்டு பேஸ்டை ஒரு மாதத்திற்கு தேவையானதை அரைத்து பாதியை பிரிட்ஜிலும் , மீதியை பிரீஜரிலும் வைத்து கொண்டால் வசதியாக இருக்கும்.

2.சேமியா, ரவை போன்றவைகளை வறுத்து வைத்து கொண்டால் காலை டிபன் ஈசியாக முடிக்கலாம்.

3.மோர் குழம்புக்கு தேவையானதை கொஞ்சம் நிறைய அரைத்து இரண்டு முன்றாக பிரித்து வைத்து கொண்டாலும் ரொம்ப சுலபமாக தேவைக்கு அதில் தண்ணீர் கலந்து கொதிக்க வைத்து மோர் கலந்து கடைசியில் தாளித்து இரக்கலாம்.

4. புளி பேஸ்ட் நிறைய செய்து ஐஸ் கியுப் செய்து பீரிஜரில் போட்டு வைத்து கொண்டால் நிமிழத்தில் ரசம், மீன் குழம்பு, புளி குழம்பு, வத்த குழம்பு வைத்து விடலாம்.

5. தேங்காயுடன் முந்திரி, பாதம், பிஸ்தா சேர்த்து அரைத்து வைத்து நாலைந்து பாகமாவோ அல்லது ஐஸ்கியுப் போலவோ போட்டு வைத்து கொண்டால் குருமா குழம்பு வைக்கும் போது இன்னும் சுலபமாக இருக்கும்.

6.கொண்டைகடலையை நிறைய வேக வைத்து வைத்து கொண்டால் சென்னா, சுண்டல், சாலட், வடை போன்றவையை எளிதில் தயாரிக்கலாம்.


7.தேசைக்குமாவு அரைக்கும் போது ஒரு கிலோ அள‌விற்கு அரைத்து வைத்து கொண்டால் அந்த‌ வார‌ம் முழுவ‌தும் தேவைக்கு இட்லி, தோசை, ஆப்ப‌ம், ஊத்தாப்ப‌ம், அப்ப‌ம் என்று செய்து கொள்ள‌லாம்.

8.தினம் சப்பாத்தி சாப்பிடுபவர்கள் மாவு நிறைய குழைத்து கொஞ்சம் கொஞ்மாக பாக்கெட் போட்டு பிரீஜரில் வைத்து கொள்ளலாம்.

2 கருத்துகள்:

Mrs.Faizakader said...

மிகவும் ஈசியான டிப்ஸ் மற்றும் பயனுள்ள டிப்ஸ் அக்கா

Jaleela said...

உங்கள் பாரட்டுக்கு மிக்க நன்றி

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா