Friday, July 10, 2009

குழந்தைக்கு மசாஜ் மற்றும் ஆயில் பாத்




1. முதலில் ஒரு இரண்டு மூன்று பெரிய பேப்பர் எடுத்து கொண்டு அதில் குழந்தையை படுக்க வைத்து எண்ணையை தடவுங்கள்.துணியில் என்றால் எண்ணை பிசுப்பாகிடும். அதை துவைக்க நேரம் எடுக்கும்.

2. தலைக்கு சிறிய தலையனை (அ) டர்கி டவலை நான்காக மடித்து தலைக்கு வைத்து கொள்ளுங்கள்.

3.ஜான்சன்ஸ் பேபி ஆயில் (அ) ஆலிவ் ஆயில் தேய்த்து மெதுவாக பூவை தொடுவது போல் மசாஜ் செய்யுங்கள்.இப்படி செய்வதால் கால் முட்டி, நரம்புகள் வலுவடையும்.15 நிமிடம் ஊறினால் போதும் உடனே வெது வெதுப்பான நீரில் குளிக்கவையுங்கள்.குளிக்க கொண்டு செல்லும் போதே உங்கள் தோள் பட்டையி டவல் இருக்கட்டும்.குளிக்க வைத்து உடனே தோள்பட்டையில் உள்ள டவல் மேல் போட்டு அபப்டியே மூடி கொண்டு போய் பெட்டில் போடு நன்கு துடைக்கவும்.பேனை ஆஃப் பண்ணிவிடவும்.

4. இப்போது நல்ல வயிற்றை நிறைத்து , ஏப்பம் விட விட்டு பெரிய டவல் கொண்டு நன்கு இரண்டு கைபுறம், கால் புறம் சேர்த்து கட்டுவது போல் கொண்டு வந்து பெட்டில் நாலா பக்கமும் தலையன் வைத்து தூங்க வையுங்கள்.(ஓவ்வொரு முரை பால் கொடுக்கும் போதும் நீங்கள் சூடான பானம் ஏதாவது குடித்து கொள்ளுங்கள்.(சூப், ஹார்லிக்ஸ், பால்,போஸ்ட், போன்வீட்டா, ராகி, அல்ல்து வெண்ணீர்)

5. வாரத்திற்கு முன்று நாட்கள் ஆயில் மசாஜ் செய்தால் போதும்.

ஜலீலா
(தொடரும்)


0 கருத்துகள்:

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா