Friday, August 14, 2009

சுறா மீன் மிளகு குழம்பு




வேக வைக்க
********************
சுறா மீன் - அரை கிலோ
உப்பு - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை தேக்கரண்டி
தாளிக்க
***********
நல்லெண்ணை - முன்று மேசை கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
சீரக - கால் தேக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி
மிளகு - முன்று
சோம்பு - ஐந்து
வெங்காயம் - முன்று

இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை தேக்கரண்டி

கருவேப்பிலை - கால் கைபிடி
தக்காளி - இரண்டு

அரைக்க
************
தக்காளி - ஒன்று
முழு மிளகு - ஒரு மேசை கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
சீரகம் தூள் - ஒரு மேசை கரண்டி
சோம்பு தூள் - கால் தேக்கரண்டி
தனியா தூள் - ஒன்னறை மேசை கரண்டி
தேங்காய் பவுடர் - முன்று தேக்கரண்டி
பூண்டு - முன்று பற்கள்

கொத்து மல்லி தழை - சிறிது (கடசியில் தூவ)



1. முதலில் சுறா மீனை சுத்தம் செய்து அதில் உப்பு, மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.

2. ஒரு தக்காளி, பூண்டு, தேங்காய்,சோம்பு, சீரகம்,தனியா,மிளகாய் தூள் , மிளகு வகைகளை சேர்த்து அரைக்கவும்.

3. சட்டியை காயவைத்து நல்லெண்னையை ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளிக்கவும்.
பிறகு அரைக்க கொடுத்துள்ளவைகளை அரைத்து சேர்க்கவும்.

4. மீனில் உள்ள தண்ணீரை வடித்து அந்த தண்ணீரையும் சேர்க்கவும்.

5. மீனை முள்ளுடன் கால் கிளோ அளவிற்கு எடுத்து கொண்டு மீதியை (புட்டு (அ) கட்லெட் ) செய்ய தனியாக எடுத்து வைக்கவும்.

6. தாளித்தவைகள் நன்கு நல்ல தண்ணீர் கூட கொஞ்சம் சேர்த்து 20 நிமிடத்திற்கு தீயை மிதமாக வைத்து கொதிக்க விட வேண்டும்.

7. கடைசியில் முள்ளுடன் உள்ள மீனை சேர்த்து நல்ல கொதிக்க விட்டு கிரேவி பதம் வந்து மசாலா வாடை அடங்கியதும் இரக்கி சாப்பிடவும்.

சும்மா கார சாரமாக கும்முன்னு இருக்கும்.



குறிப்பு:

குழந்தைகளுக்கு காரத்தை சிறிது குறைத்து செய்து கொடுக்கலாம். கடுஞ்சளிக்கும் இது ரொம்ப நல்லது.

மிதி முள்ளில்லாமல் எடுத்து வைத்த மீனில் புட்டு ( அல்லது) கட்லெட் (அ) வடை செய்யலாம்.

இதில் புளி சேர்க்க தேவையில்லை சுறா மீன் கட்லெட்டை அடுத்த குறிப்பில்.
இது பிள்ளை பெற்றவர்களுக்கு ரொம்ப நல்லது.

4 கருத்துகள்:

சீமான்கனி said...

அக்கா இதெல்லாம் படிக்கும்போதெல்லாம் பசிக்குது....
அம்மா நனைப்பு வருது...ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம் ...

Jaleela Kamal said...

அம்மா நினைப்பு வருதா? என் எல்லா குறிப்புகளும் அவரவர்களுக்கு அம்மாவை நினைவூட்டும்,

செய்து பாருங்கள் சீமான் கனி ஈசியான முறை தான்

shakeela said...
This comment has been removed by a blog administrator.
Jaleela Kamal said...
This comment has been removed by the author.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா