Sunday, March 29, 2015

சிறப்புவிருந்தினர் பதிவு 10 - மதுரை ஸ்பெஷல் உப்பு கறி/மட்டன் ஃப்ரை - ஃபரின் அஹமத்



ஃபரின் ஆங்கில பிலாக் தோழி, சமீபத்தில் தான் பிலாக் மூலம் பழக்கம்,
ஆனால் அவர்கள் (chennai) ஊரில் எங்க கடையில் (Chennai Plaza) இருந்து அவர்கள் சொந்த காரர்கள் மூலம் புர்கா ஷால் எல்லாம் வாங்கி இருக்கிறார்கள், வாங்கியது இல்லாமல் துணியின் தரத்தை பற்றியும் சொல்லி மெயில் செய்தார்கள் அப்போது தான் அவர்களும் பிளாக்கர் என்று தெரியவந்தது.

சமையல் என்பது ஒரு கலை சமையல் மேல் உள்ள ஆர்வத்தால் எவ்வளவு பிஸியிலும் , உடம்பு முடியலன்னா கூட ஒரு சின்னதா ஒரு சமையல் செய்ய எனக்கு பிடிக்கும். அதை இன்னும் மெருகேற்றி கலை நயத்துடன் ஒரு திரைபட ரேஞ்சுக்கு சொல்லி போஸ்ட் போட்டால் படிக்க எவ்வளவு சுவாரசியமாக இருக்கும் , அப்படி ஒரு பதிவுகள் தான் நான் ஃபரின் பிளாக்கில் பார்த்தது. நான் பரின் சமையல் மூவியின் ரசிகை யாகி விட்டேன்.

அவரகள் கிச்சனில் டைரக்ட் செய்து 50 நாள் , 100 நாள்  என்று பல நாட்கள் ஓடிக்கொண்டு இருக்கும் படங்கள் சில கிழே

http://www.farinsfunflavour.com/

கலர் கலர் ah காசா பூரி Movie on
முள்ளும் மலரும் முள்ளங்கி chutney movie on…
அவங்க விதவிதமாக வைத்துள்ள இந்த பெயரை விரும்பி படிக்கவே அங்கு போய் அங்கே தங்கிடுவேன்.

About jaleela akka:

'ஒரு வளர்ந்து வரும் என்னை மாதிரி இயக்குனர் குநடிக்க வாய்ப்பு கிடைச்சா எப்படி இருக்கும் .. அப்படி ஒரு சந்தர்பம்  Jaleela அக்கா மூலமாக எனக்கு கிடைத்தது  .. உடனே இயக்குனர் சேரன் மாதிரி ஞாபகம் வருதே ஞாபகம் வருதே  என்று   சொல்லி நானும் நடிக்க (guest post) கிளம்பிடேன்  ... ஆனா என்ன அவருக்கு மூன்று கதாநாயகி இருந்தாங்க , எனக்கு சினேகா மாதிரி
 'ஒரு அன்புத்தோழி Jaleela (அக்கா)மட்டும் தான்  .. 

அக்கா நம்ம டைரக்டர் பாரதிராஜா மாதிரி ,என்றென்றும்  மாறாத நம் தமிழ் மண்வாசனை  அவர்களின் வலைப்பூவில் வீசி கொண்டே இறுக்கும் . எனது இனிய தமிழ் மக்களே என்று சொல்லி சும்மா அறுசுவை விருந்து அக்காவின் வலைப்பூவில் ஏராளம். என்னவென்று சொல்லுவதுஅம்மா இந்த வஞ்சியின் சமையல் அட்டகாசங்களை , சொல்ல வார்தையேயில்லை...சமையலை தவிர்த்து இவுங்க ஒரு பெரிய Business  Magnet... Chennai Plaza வின் உரிமையாளர்..

ஒன்றாய் இரண்டாய் வலைபூ உனது , குழந்தை வளர்ப்பு , முத்தான துஆ க்கள்  என்று உண் கைவண்ணத்தை சொல்லிகொண்டே போகலாம் .. எல்லாம் வல்ல அல்லாஹ் நம் நட்பு என்னும் அழகான பூஞ்சோலையை எப்பொழுதும் தொடர வைப்பானாக ..ஆமீன் 


என்னைபற்றி சொல்லுற அளவுக்கு நான் அவ்வளோ பெரிய அப்பாடக்கர் இல்லை ...

Just ஒரு புதிய வளர்ந்து வரும் டைரக்டர் ..என்னோட ஓடுற படம், ஓடாத படம், மொக்க படம், காமெடி படம் என்று அணைத்து படத்தினை பார்க்க கிளிக் செய்யவும்.
அன்பான பெற்றோர் , முத்தான சகோதரர்கள், Romantic கணவன், அழகான குழந்தை, blessed friends என்று இறைவனின் அருளால் வாழ்கை என்னும் படம்Super ah ஓடுது .


Do A.R.Rahman needs a baby assistant? ? Am ready for composing!!! Start Music!!

Okay!!! உங்க Mind  Voice புரியுது, உன் படத்தோட கதைய சொல்லுவீங்களா இல்லையா தானே கேட்குறீங்க !!! இதோ படத்தின் கதைக்கு போவோமா ...

இன்றைய ரெசிபி உப்பு கறி, இது  மதுரையின் பாரம்பரிய உணவு மட்டுமல்ல எங்க மாமியாரின் Signature reciepe .


Just include 


Movie Name : உன்னாலே உன்னாலே உப்பு கறி 



Madurai Special Uppu kari

 மட்டன் - 300 கிராம்
வெங்காயம் - 2 பெரியது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேசைகரண்டி
முழ்ய் சிவப்பு மிளகாய் பொடித்தது - 2 
கடுகு - ஒரு தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிது
துருவிய தேங்காய் - 2 மேசை கரண்டி
உப்பு தேவைக்கு
எண்ணை - 1 மேசைகரண்டி



செய்முறை
மட்டனை சுத்தமாக கழுவி சிறிய துண்டுகளாக போடவும்.


குக்கரில் மட்டனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து தேவைக்கு தண்ணீர் சேர்த்து 6 விசில் விட்டு இரக்கவும்.மட்டன் துண்டுகளை தனியாக எடுத்து வைக்கவும்.

ஒரு வாயகன்ற கடாயை சூடு படுத்தி கடுகு,கருவேப்பிலை,  சேர்த்து தாளித்து வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வெந்ததும் சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்து வதக்கி வேக வைத்து வைத்துள்ள மட்டன் துண்டுகளை சேர்த்து மூடி போட்டு முன்று நிமிடம் வேகவிடவும். நன்கு மசாலாக்கள் ஒன்று சேர்ந்ததும் 
கடைசியாக துருவிய தேங்காய் சேர்த்து 2 நிமிடத்துக்கு கிளறி இரக்கவும்.
சுவையான மதுரை ஸ்பெஷல் பாரம்பரிய உப்புகறி ரெடி.

கட்டு சாதவகைகள் மற்றும் ரொட்டி சப்பாத்திக்கு சைட் டிஷ் ஆக வைத்துகொள்ளலாம்.

At the end ..

உங்க எல்லோருக்கும் இந்த உப்பு கருவாடு sorry உப்பு கறி  movie பிடிச்சுருக்கும் என்று நினைகிறேன் ..

இந்த் படத்தை பார்த்த அனைவருக்கும் Romba Dhanksu pa .. அப்படியே எல்லோரும் நம்ம Jaleela -அக்காக்கு ஒரு ஓ-O  Podunga ..


Madurai Uppu Kari

Ingredients:

Mutton – 300 gms
Onion – 2 big size chopped
Ginger garlic paste – 1 tbsp
Whole Dry red chilly-2
Turmeric powder- ½ tsp
Red chilly flakes- 1½ tbsp
Mustard Seeds- 1 tsp
Curry leaves- few sprigs
Grated coconut- 2 tbsp
Salt- as need
Oil- 1 tbsp

Method:

Wash and clean the mutton in to small pieces. In a pressure cooker add the mutton pieces + ginger garlic paste +salt + turmeric powder and required amount of water and pressure cook until the mutton gets cooked well for 6 whistles. Release the pressure and take the cooked pieces and keep aside

Heat oil in a pan add the mustard seeds, once it splutters add the Whole dry red chilly and curry leaves followed by chopped onions. Mix it well. Add some salt for onion

Once the onion gets cooked throw the Red chilly flakes, give a quick stir. Now add the cooked mutton pieces, Mix it nicely and close it with a lid.

After 5 mins, open the lid and again mix it well. Close the lid.. Again after 3 mins open and mix it well.. Now at this time, mutton has mixed up well with the onion mixture.. Now add the grated coconut and give a quick stir and let it sit for another 2 mins.

Switch off the flame and serve it hot!!!


அறுசுவை தோழிகள், தமிழ் குடும்ப தோழிகள்,முக நூல் தோழியர்கள் வலை உலக தோழ தோழியர்கள் மற்றும் இதை பதிவை பார்ப்பவர்கள் யாருக்கும் விரும்பம் உள்ளவர்கள் உங்கள் ஊரின் பாரம்பரிய சமையல் குறிப்புகளை என்னுடன் இங்கு பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

என்ன குறிப்பாக இருந்தாலும், அதாவது டிபன் வகைமதிய உணவிற்கு செய்யும் கறி வகைகள்மாலை நேர சிற்றுண்டி மற்றும் இரவு சாப்பாடு வகைகள்.குழந்தைகளுக்கு செய்யும் உணவு, கர்பிணி பெண்களுக்கான உணவு, பூப்பெய்திய பெண்களுக்கான உணவு, பிள்ளை பெற்றவர்களின் பத்திய உணவு, திருமணத்தில் செய்யும் முக்கிய வகை உணவு, விஷேச நாட்களில் செய்யும் பலகாரம்மற்றும் பல.....வகைகளை அனுப்பலாம்.. நானும் சிலரை அழைக்கிறேன்...விருப்பம் உள்ளவர்கள்  இங்கு கிழே என் பதிவின் கீழ் கருத்து தெரிவிக்கலாம்  அல்லது கிழே கொடுக்கப்பட்டுள்ள என் முகவரிக்கு மெயில்  அனுப்புமாறு கேட்டு கொள்கிறேன்.


feedbackjaleela@gmail.com or cookbookjaleela@gmail.com

Burka Hijab @ Chennaiplaza
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Monday, March 23, 2015

Radio Salaam Ladies Day - Sambar Competition - சாம்பார் போட்டி - ஹையா பரிசு வாங்கியாச்சு



Radio Salaam Ladies Day Out Family event which happened no 20th March. 

ரேடியோ சலாம் மகளிர் தினம் கொண்டாட்டம்





பிலாக்கில் ஈவண்டுகளுக்காக  போஸ்ட் செய்து நிறைய பரிசுகள் வாங்கி இருந்தாலும் மேடையில் வாங்கும் முதல் பரிசு இதுவே, அல்ஹம்துலில்லாஹ்,எல்லா புகழும் ஏகவல்ல இறைவனுக்கே.


ரேடியோ சலாம், 
https://www.facebook.com/radiosalaam1065/photos/a.734108473335104.1073741828.734107146668570/812395945506356/?type=1&theater
Ladies Day out - cookery competition - Sambhar.
ஆபிஸ் போற வழியில மட்டும் தான் ரேடியோ கேட்கமுடியும். இந்த சாம்பார் போட்டியை சொல்லி கொண்டே இருந்தாங்க. வெள்ளி மட்டும் தான் விடுமுறை, அன்று முழுவதும் சென்னை ப்ளாசா வேலைகள் , போகலாமா வேண்டாமா? போனால் ஒரு நாள் வேஸ்டாகிடுமே என்று நினைத்து கடைசியில் சரி சாம்பார் தானே ரொம்ப டென்ஷன் எடுக்கல எப்பவும் செய்வது போல் செய்துட்டு மதியம் ஜும்மா தொழுகைக்கு பிறகு போனோம். 
27 பெண்கள் சாம்பார் செய்து கொண்டு வந்தார்கள் , அதில் 7 பேரை செலக்ட் செய்து நான் 5 வது ஆச்சி மசாலா கிஃப்ட் பேக் ஒன்று பரிசாக கொடுத்தார்கள்,





Key Events on Radio Salaam Ladies Day Out 2015!
1. Sambhar Competition
Participants to bring in their pre-cooked Sambhar and display it to our judges. Categorized with Taste, Presentation and style

2. Mrs UAE Pageant
UAE’s first show to choose the most talented, bold, well informed, ambitious, motivated, enthusiastic woman. Beauty is a thing seldom seen. It is held by all within the soul it lies, waiting to come out to the surface. Competition is held in three rounds. Women to dress up in their best ethnic wear!

· Round One – Fashion Walk.
We lend you the stage and you show us the walk that will impress the judges

· Round Two – Smart Lady
This goes without saying, no pageant runs without asking questions and checking the smartness. Are you the smart lady?

· Round Three – Talent show
You can gladly choose to sing or dance or juggle the bottles, up to you. Make sure you impress the judges.

3. Pattimandram
Topic: Women today prefer to have good-looking men as their life partners / Women today prefer to have intelligent men as their life partners.

4. Activities for men (husbands) and children
Dialogue delivery, singing contests and many other games and prizes family members!

It is going to be a definite family entertainer!






 ஏழு கறி சாம்பார் /காய்கறி சாம்பார்                                                 20.03.2015


தேவையான பொருட்கள்
காய் வேகவைக்க
பீன்ஸ் - 6
கேரட் - 1
கத்திரிக்காய் - 3
அவரைக்காய் - 6
முருங்கைக்காய் - 1
பூசனிக்காய் – 50 கிராம்++
பெங்ளூர் கத்திரிக்காய் சௌ சௌ (chayote) – 50 கிராம்
தக்காளி பெரியது – 2
சின்ன வெங்காயம் – 10
பச்சமிளகாய் – 2
சாம்பார் பொடி  - முன்று தேக்கரண்டி
மஞ்சள் பொடி – கால் தேக்கரண்டி
வெல்லம்  - சிறிது
புளி எலுமிச்சை அளவு – கட்டியாக கரைத்து கொள்ளவும்
பருப்பு வேகவைக்க
துவரம் பருப்பு – 150 கிராம்
வெங்காயம்  - பெரியது ஒன்று
வெந்தயம் – கால் தேக்கரண்டி
பெருங்காயப்பொடி – கால் தேக்கரண்டி
மஞ்சள் பொடி கால் தேக்கரண்டி
தாளிக்க
எண்ணை – 3 தேக்கரண்டி
நெய் – ஒரு தேக்கரண்டி
கருவேப்பிலை – 20 இதழ்கள்
சின்ன வெங்காயம் – 5
கொத்துமல்லி தழை – சிறிது
அலங்கரிக்க – கொத்து மல்லி தழை

Idli & veg sambhar

செய்முறை
துவரம் பருப்பை களைந்து அதில் ஓன்னறை டம்ளர் தண்ணீர் சேர்த்து வெங்காயம்வெந்தயம்பெருங்காயப்பொடி
மஞ்சள் பொடி சேர்த்து வேகவைக்கவும்.
வெந்த பருப்பை மசித்து வைக்கவும்.
காய் கறிகளை கழுவி அரிந்து அதில் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் , உப்பு சேர்த்து கொதிக்க 
விட்டு அதில் சாம்பார் பொடி சேர்த்து வேகவைக்கவும்.
காய் வெந்த்தும் கரைத்த புளி சேர்த்து கொதிக்க விடவும்.
அடுத்து வெல்லம் மற்றும் வெந்த பருப்பை சேர்த்து கொத்துமல்லி தழை சிறிது கருவேப்பிலை சிறிது தூவி கொதிக்க விட்டு இரக்கவும்.
கடைசியாக தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சாம்பாரில் சேர்த்து இரக்கி கொத்துமல்லி தழை தூவி 
பரிமாறவும்.

குறிப்புபருப்பு வகைகளில் மசூர் தால் ,மூங் தால் சேர்த்தும் சாம்பார் செய்யலாம்.
காய்கறிகள் பிடிக்காத குழந்தைகளுக்கு எல்லாவகையான காயும் சேர்த்து செய்தால் காய்களின் சத்து சூப் மற்றும் ஜூஸ் சாம்பாரில் இரங்கி சத்தான தாக இருக்கும்.
.நீரிழிவு நோய்கார்களுக்கு இந்த காய் கறிகளுடன் பாகற்காயைகூட சாம்பாரில் சேர்க்கலாம் கசப்பு தெரியாது



ஆச்சி ராகி பவுடர்
ஆச்சி சில்லி பவுடர்
ஆச்சி பெருங்காயப்பொடி  ( கம கமக்குது)
ஆச்சி சாம்பார் பொடி
ஆச்சி அப்பளம்
ஆச்சி ரவா கேசரி மிக்ஸ்







இது காரைக்கால் சாம்பார் ஆனால் இதில் சுண்டைக்காய் போட்டு சமைத்து இருந்தார்கள் பிரஷ்ன்டேஷன் அழகாக இருந்தது ஆனால் கசந்து விட்டது, நானும் பாகற்காய் போடலாம் என்று இருந்தேன் ,நல்ல வேளை போட வில்லை , என் சாம்பாரும் கொஞ்சம் டேஸ்ட் மாறி இருக்கும்.





அங்க டேஸ்ட் , ப்ரண்டேஷன் & ஸ்டைலுன்னு போட்டு இருந்தார்கள்.
நல்ல செய்துட்டு சரியா ப்ரண்ட் பண்ண தான் எனக்கு வராது. இதில் சாம்பாரில் கவனம் செலுத்த வில்லை, வறுத்து திரித்து செய்து இருக்கலாம் , இல்லை ஆச்சி சாம்பார் பொடி பயன் படுத்தி அந்த கவருடன் கொண்டு வந்து வச்சி இருக்கலாம்.
அங்க வைக்க இடமும் பத்தவில்லை ,

ஆனால் பரிசு பெற்றவர் அங்க ப்ளாஸ்டிக் கண்டெயினர் மூடி வைத்து நம்பர் 1 என்று எழுதி இருப்பதுக்கு தான் முதல் பரிசு. அவங்க எந்த பவுளிலும் வைத்து பிரஷன்ட் பண்ண வில்லை எதன் அடிப்படையில் தேர்வு செய்தார்கள் என தெரியவில்லை.


அடுத்து ஒரே வீட்டில் முன்று பேர் முன்று விதமாக செய்து வைத்திருந்தார்கள் அதில் ஒருவர் செலக்ட் ஆனார்கள்.

தெரிந்து இருந்தால் முன்று பேரை நானும் கூப்பிட்டு போயிருப்பேன் ஹிஹி

அடுத்து அங்கு இருக்கும் வடையெல்லாம் வெளியில் விற்பதை வாங்கி வைத்து விட்டார்கள் சாம்பார் மணத்துடன் வடை மணம் தான் அதிகம் அங்கு/





நடுவில் குட்டியாக ஒரு சின்ன கிண்ணம் போல் இருக்கு பாருங்கள் அவங்க அதை தான் வைத்தார்கள் அழகாக ஒரு பவுளில் வைத்து இருக்கலாம்.

Heart Shape Idli



ஹார்ட் ஷேப் ல இட்லி செய்தாலும் செய்தேன் அதை பிள்ளைகள் கிட்ட இருந்து பாதுகாப்பாதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.
டிஸ்ப்ளே செய்து எல்லாரும் போய் உட்கார்ந்து விட்டார்கள் என் பிளேட் கடைசில் விழுவது போல் இருந்தது நானும் என் பையனும் மாறி பார்த்து கொண்டு இருந்தோம்.

நுழைந்ததும் முதலில் கார்னரில் இருப்பது என் சாம்பார் பிள்ளைகள் எல்லாம் உடனே இதில் டூத் பிக் சொருகி வைத்து இருந்தேன் , நேர வந்து அந்த அப்படியே  எடுக்க வந்தார்கள், நான் கொஞ்சம் பொறுங்கள் இன்னும் கொஞ்ச நேரத்தில் எல்லாத்தையும் கொடுத்து விடுகிறேன், இரண்டு பழம் வைத்தேன் ஒருபையன் நே ர வந்து அபேஸ் சரி ஒகே சாப்பிடு என்று சொல்லிட்டேன்.

ஜட்ஜ்கள் வந்து சாப்ப்பிட்டு பார்த்தார்கள் கலக்கி கலக்கி குடிச்சி பார்த்தார்கள்./

அதற்குள் அங்கே பெண்கள் திறமைகள் எல்லாம் ஓவ்வொருத்தராக ஆடி, பாடி, நடித்து , கவிதை சொல்லி, மிஸ் வோல்ட் போல் கேட் வாக் எல்லாம் செய்து காண்பித்தார்கள்,. இடையிலேயே சாம்பாருக்கான வின்னர்களை அறிவித்துவிட்டார்கள், 
நம்பர்  19 ,ஜலீலா கமால், ஜலீலா கமால், ஜலீலா கமால் முன்று முறை ஆடிட்டோரியம் அலற என் பெயரை கூப்பிட்டதும் எனக்கு ஒன்றுமே ஓடல  நேராக மேடையில் போய் பரிசை பெற்று கொண்டேன்.
கடைசி வரை அங்கு இருக்க வில்லை, இருந்திருந்தால் மேடையில் அனைவருடனும் மறுபடி நிற்க வச்சி புகைபடங்கள் எடுத்து இருப்பார்கள்.
ஆனால் மக்ரீப் தொழுகைக்குள் வீடு போய் சேரனும் என்பதால் உடனே கிளம்பிட்டோம்.
போலாமா வேண்டாமா இவர் கூப்பிட்டு போவாரோ மாட்டாரோன்னு நினைத்து கலந்து கொள்ள ஆர்வம் இல்லை , கடைசி நேரத்தில் கலந்து இவர் ஒகே போகலாம் என்றதும் 
, ஒரு தோழி வின் பண்ணுகிறீரோ இல்லையோ போங்க உங்களுக்கு சென்னை ப்ளாசாவுக்கு 4 காண்டாக்ட் ஆவது கிடைக்கும் என்று சொன்னார்கள் 
அதே போல் சில ஆட்கள் அறிமுகமும் ஆனார்கள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது இது தானா?
காலை பத்து மணிக்கு தான் செய்ய ஆரம்பித்தேன், அவசரத்தில் பிரிண்ட் எடுத்த்தில் குறிப்பில் என்ன சாம்பார் பொடி என்று எழுத மறந்துட்டேன்.

Radio salaam




https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/