Saturday, May 16, 2015

மரண அறிவிப்பு


அஸ்ஸலாமு அலைக்கும்
என் மாமனார் (சேமர் அப்துல் காதர்) மே 5 ந்தேதி காலை 6 மணிக்கு வஃபாத்தாகி விட்டார்கள். 
ரஜப் 16 - 1436
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
நாங்க ஊர் சென்று வந்தோம்
(பொறுமையின் சிகரம்,நடந்து சென்றால் பூமிக்கு கூட நோகாமல் நடப்பார். )
 எங்கள் அனைவருக்கும் குடும்பத்தார்க்கும் “ஸப்ரன் ஜமீலா” என்னும் அழகிய பொறுமையைக் கொடுத்தருள துஆ செய்யுங்கள்
//நாம் அல்லாஹ்விற்கே உரியவர்கள்; மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்லவிருக்கிறோம்.//
இறைவனிடம் அன்னாரின் மஃபிரத்துக்காக நானும் துஆ செய்கிறேன் நீங்களும் துஆ செய்யுங்கள். மறுமை நாளின் கேள்விகணக்கை எளிதாக்கி கப்ரின் அதாபிலிருந்தும் இடுக்கத்திலிருந்தும், பாதுகாத்து கப்ரில் வெளிச்சத்தையும, விசாலத்தையும் தந்தருள்வானாக.!! ஆண்டவன் அவர்களின் பாவங்களை ம்ன்னித்து ஜன்னத்துல் பிர்தவுஸில் நுழைய செய்வானக!!
மறுமை வாழ்வை வல்ல ரஹ்மான் சிறப்பானதாக்கி தருவானாக!!ஆமின்
எங்கள் ரப்பே அவர்களுக்காக எங்களின் து’ஆவை ஏற்றுக் கொள்வாயாக. அவங்க நோய்வாய்ப்பட்டு வருந்திய நொடிகளனைத்தையும் அன்னாரது மறுமையில் அமல்களாக மாற்றி ஷி’ஃபா தந்தருள்வாயாக. ஆமீன்
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்றாஹீம வ அலா ஆலி இப்றாஹீம இன்னக்க ஹமீதுன்ம் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்றாஹீம வ அலா ஆலி இப்றாஹீம இன்னக்க ஹமீதுன்ம் மஜீத்.


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Friday, May 1, 2015

கருப்பு உளுந்து கார சுண்டல்







கருப்பு உளுந்து இனிப்பு சுண்டல் -Black Urad Dhal Sundal

இடுப்பெலும்பை பலப்படுத்தும் கருப்பு உளுந்து, இதில் உளுந்து சாதம், உளுந்து களி, உளுந்து புட்டு உளுந்து இனிப்பு மற்றும் கார சுண்டல் போன்றவை செய்யலாம்.
வட இந்தியர்கள் தால் மக்கானி என்று ஒரு குழம்பு வைப்பார்கள் அது கருப்பு உளுந்து மற்றும் ராஜ்மாவில் செய்வது. இது பூப்பெய்திய பெண்களுக்கு , கர்பிணி பெண்களுக்கு, பிள்ளை பெற்றவர்களுக்கு இடுப்பெலும்பு பலம் பெற கருப்பு உளுந்தில் இது போன்ற உணவு வகைகளை சமைத்து கொடுக்கலாம்.
ஆண்களுக்கும் நல்லது.கூடுமான வரை இட்லிக்கு, அடை வகைகளுக்கு அரைக்கும் போது வெள்ளை உளுந்துக்கு பதில் கருப்பு உளுந்தும் சேர்த்து செய்வது நல்லது.




கருப்பு உளுந்து கார சுண்டல்


கருப்பு உளுந்து - 100 கிராம்
உப்பு - கால் தேக்கரண்டி

தாளிக்க

எண்ணை - 1 தேக்கரண்டி
கடுகு , உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
முழு மிளகாய் - காஞ்ச மிளகாய் - இரண்டு
கருவேப்பிலை - சிறிது
பெருங்காயம்  - ஒரு சிட்டிக்கை
துருவிய தேங்காய்  -  கால் கப் + தேவைக்கு

செய்முறை

உளுந்தை 8 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் வேகவைத்து எடுக்கவும்.

வெந்ததும் தண்ணீரை வடித்து மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்து வெந்த உளுந்தை சேர்த்து நன்கு பிரட்டி எடுக்கவும்.
சுவையன உளுந்து சுண்டல் ரெடி.

பண்டிகை கால சமையல் , நோன்பு கால சமையல்

  https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/